திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஊராட்சி ஒன்றியம், தலையாமங்கலம் ஊராட்சியில் வரி வசூல் கடைபிடித்தல் குறித்த விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.தி.சாருஸ்ரீ, இ.ஆ.ப., அவர்கள தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஊராட்சித்தலைவர் திரு.கோ.பாலசுப்ரமணியன் அவர்கள் உடனிருந்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது…
ஊராட்சிகளிலுள்ள அனைவரும் வீட்டுவரி, குடிநீர் வரி, தொழில்வரி ஆகியவற்றை தவறாது செலுத்த வேண்டும். தவறாமல் செலுத்தினால் தான் ஊராட்சிக்கு வேண்டிய நிதியை அரசிடமிருந்து பெறமுடியும். அதன்மூலம் நமது ஊராட்சிகளின் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.தி.சாருஸ்ரீ, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திருமதி.சௌந்தரியா, ஊராட்சிமன்றத்தலைவர் திருமதி.கலைவாணி பாலகிருஷ்ணன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிகள் கலந்து கொண்டனர்.