45,000 கோடியில் ஆர்.எஸ்.எஸ் க்கு அலுவலகமா?

0
155

பாஜகவின் தலைமை அமைப்பான ஆர்.எஸ்.எஸ். 45,000 கோடி ரூபாய் மதிப்பில் தில்லியில் ஓர் அலுவலகத்தைக் கட்டிக் கொண்டிருப்பதாக செய்திகள் வருகின்றன. 3.5 இலட்சம் சதுர அடியில் அந்த அலுவலகம் கட்டப்பட்டுக் கொண்டு இருக்கிறது. தலைமை அலுவலகம் நாக்பூரில் இருந்தாலும் தில்லி அலுவலகம் தலைநகரம் என்ற காரணத்தால் முக்கியத்துவம் பெறும்.

தேசிய அளவில் சர்சங்கசாலக் என்ற பெயரில் இந்தியா முழுவதும் இவ்வமைப்பில் 25 இலட்சம் முதல் 60 இலட்சம் உறுப்பினர்களும், 51,688 கிளைகளும் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

சங்கப் பரிவாரின் உறுப்பு அமைப்புகள்:

பாரதிய ஜனதா கட்சி
இந்து சுயம்சேவாக் சங்கம்
விசுவ இந்து பரிசத்
பஜ்ரங் தள்
இந்து முன்னணி
துர்கா வாகினி
ராஷ்டிரிய சேவிகா சமிதி
அகில பாரத வித்தியார்த்தி பரிசத்
இந்து இளைஞர் சேனை
இந்து மக்கள் கட்சி
பாரதிய மஸ்தூர் சங்கம்
ராம ஜென்மபூமி அறக்கட்டளை
பாலகோகுலம்
சுதேசி விழிப்புணர்வு இயக்கம்
சேவா பாரதி
பாரதிய கிசான் சங்கம்
வித்யா பாரதி
இந்து விவேக கேந்திரம்
பாரதிய ஆய்வு மையம்
வனவாசி கல்யாண் ஆசிரமம்
ராஷ்டிரிய சீக்கியர் இயக்கம்
முஸ்லீம் ராஷ்டிரிய மஞ்ச்
சபரிமலை ஐய்யப்ப சேவா சமாஜம்
சமசுகிருத பாரதி
ஏகலைவன் கல்வி அறக்கட்டளை
விவேகானந்த கேந்திரம்

ஆகிய பல்வேறு பெயர்களின் கிளைகளை பரப்பி செயல்பட்டு வருகிறது.

ஆர் எஸ் எஸ் மூன்று முறை இந்தியாவில் தடை செய்யப்பட்டது. 1948 காந்தி படுகொலை செய்யப்பட்ட பொழுது, அவசர நிலை (1975-77) அமலில் இருந்தபொழுதும் மற்றும் 1992 ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டபொழுதும் தடைசெய்யப்பட்டிருந்தது. 1948-ம் ஆண்டு ஜனவரி 30-ம் தேதி மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைத் தடைசெய்து 1948 பிப்ரவரி 4-ல் அரசு அறிக்கை வெளியானது.

ஆர்.எஸ்.எஸ். இந்துக்களிடையே ஒற்றுமையை வளர்ப்பதுதான் தங்களுடைய நோக்கம் என்று கூறுகிறது. ஆனால், நடைமுறையில் அந்த இயக்கத்தவர் அப்படி நடந்துகொள்ளவில்லை. விரும்பத்தகாத, அதேசமயம் பயங்கரமான சில நடவடிக்கைகளில் அந்த அமைப்பின் உறுப்பினர்கள் தனிப்பட்ட முறையில் ஈடுபட்டுள்ளனர். பொதுச் சொத்துக்களுக்குத் தீயிடல், சேதப்படுத்துதல், போன்ற சம்பவங்களில் அவர்களுக்குத் தொடர்பிருப்பது தெரியவருகிறது. சட்ட விரோதமாக ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும், குண்டுகளையும் அவர்கள் சேகரித்துள்ளனர். அரசுக்கு எதிராகப் பயங்கரவாதச் செயல்பாடுகளில் ஈடுபடுமாறும் ஆயுதங்களைச் சேகரிக்குமாறும் அரசுக்கு எதிரான வெறுப்புணர்வைத் தூண்டிவிடுமாறும் காவல் துறை – ராணுவம் ஆகியவற்றுக்குக் கட்டுப்பட மறுக்குமாறும் கூட அவர்கள் கூறுகின்றனர். அவர்களுடைய செயல்பாடுகள் ரகசியமாகவே உள்ளன.

இதனிடையே
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மீதான தடையை விலக்க சில முக்கிய நிபந்தனைகளை படேல் விதித்தார். “இந்திய தேசியக் கொடியை மதிப்போம், வெளிப்படையாகச் செயல்படுவோம், அமைதியான வழிமுறைகளிலேயே ஈடுபடுவோம், அரசியல் நடவடிக்கைகளிலிருந்து விலகி நிற்போம்” என்பது அந்த நிபந்தனைகளில் சில. ஆர்.எஸ்.எஸ். கலாச்சாரப் பணியில்தான் ஈடுபடும். அரசியலில் ஈடுபடாது என்று ஆர்.எஸ்.எஸ். தனது அமைப்பு விதியிலேயே வரையறுத்து 1949-ல் படேலிடம் அளித்தது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு விதியின் 4 (பி) பிரிவு இதைத் தெரிவிக்கிறது. இதன் பிறகே 1949 ஜூலை 11-ல் ஆர்.எஸ்.எஸ். மீதான தடை விலக்கப்பட்டது.

தடை விலக்கப்பட்டதிலிருந்து இன்று வரை என்ன காரணத்திற்காக தடை விதிக்கப்பட்டதே அந்தகைய தீய செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது என்று குற்றச்சாட்டு எழுத்து வருகிறது.  2023ல் இந்தியாவில், கிறிஸ்தவர்களுக்கு எதிராக 687 வன்முறைச் சம்பவங்களைச் செய்துள்ளதையும், மணிப்பூரில் மட்டும் 400 தேவாலயங்களை எரித்துள்ளனர்.

இதனிடையே காங்கிரசின் கடந்த கால வருமானக் கணக்குகளைச் சரிபார்த்து வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பிக் கொண்டிருக்கும் போது ஆர்.எஸ்.எஸ். இன் வருவானக் கணக்கை யார் சரிபார்ப்பது என்ற விவாதம் மேலெழுந்துள்ளது. ஆர்.எஸ்.எஸ். வருவான வரியில் இருந்து தப்புவதற்கு தன்னை ஒரு டிரஸ்ட் ஆக என்.ஐ.ஓ. வாக மாறி மாறி காட்டிக் கொண்டு ஏமாற்ற முயன்ற வரலாறு எல்லாம் உண்டு. வெளிநாட்டு நிதி வரும். ஆனால், அமலாக்கத் துறை போகாது. பதிவு செய்யப்பட்ட அமைப்பல்ல என்பதால் வருமான வரித் துறை போகாது.

ஆர்.எஸ்.எஸ். இன் பல்லைப் பிடுங்க வேண்டுமானால், பாஜகவை ஆட்சியில் இருந்து விரட்ட வேண்டும். ஏப்ரல் 19 ஆர்.எஸ்.எஸ் – பாஜகவுக்குப் பாடம் புகட்ட மறந்துவிடாதீர்…. என்பன போன்ற பல்வேறு கேள்விகளை சமூக நல இயக்கங்கள் தொடர்ந்து எழுப்பி வருவதோடு பா.ஜ.க.விற்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.