நக்கீரர் தமிழ்ச் சங்கம், சிகாரா புட் புராடெக்ட்ஸ் & டாடிஸ் மசாலா, ஜெயந்தி நாராயணன் பேலஸ் திருமண மண்டபம் இணைந்து நடத்திய 78ஆவது சுதந்திர நாளை முன்னிட்டு முப்பெரும் விழா சென்னை இரும்புலியூர். ஜெயந்தி நாராயணன் பேலஸ் திருமண மண்டபம், 25.8.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது.
இலக்கியத் திறனாய்வாளர் திரு.கொடைக்கானல் காந்தி எழுதிய கேட்குவீர் மாதோர் நூல் வெளியீடு, மீனாட்சி அக்ரோ புட்ஸ் மற்றும் டாடிஸ் மசாலா நிறுவனம் துவக்கவிழா மற்றும் பல்வேறு சாதனை புரிந்த மாணவச் செல்வங்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
மாண்யுமிகு நீதியரசர் டாக்டர். ப.ஜோதிமணி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
உச்சநிதிமன்ற வழக்கறிஞர் திருமதி வேல்ஸ்ரீ அவர்கள் கொடியேற்றி விழாவினை துவக்கி வைத்தார்.
ஜெயந்தி நாராயணன் திருமணமாளிகை நிறுவனர் லயன்திரு. வி.கே.பி.நாராயணன் தரைமையில் ஜி.எஸ்.டி.ஆட்டோ இன்ஜினியரிங் கம்பெனி நிறுவனர், திரு.பி.சிவகுமார், நக்கீரர் தமிழ்ச் சங்கம் பொதுச்செயலாளர் திரு.செழியன்குமாரசாமி ஆகியோர் முன்னிலையில் விழா இனிதே நடைபெற்றது.
மீனாட்சி அக்ரோ புட்ஸ் மற்றும் டாடீஸ் மசாலா நிறுவனத்தை துவக்கி வைத்து மாண்யுமிகு நீதியரசர் டாக்டர். ப.ஜோதிமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
மேலும் “கேட்குவிர் மாதோ!” நூலை மாண்யுமிகு நீதியரசர் டாக்டர். ப.ஜோதிமணி அவர்கள் வெளியிட அரசு வழக்கறிஞர் இராஜராம், வேஸ்ட்வின் பவுண்டேசன் நிறுவனர் திருமதி.ஐ.பிரியதர்ஷினி, முள்ளும் மலரும் மாதஇதழ் ஆசிரியர், பொறியாளர் பன்னீர் ராமச்சந்திரன் ஆகியோர் நூலை பெற்றுக்கொண்டனர்.
நக்கீரர் தமிழ்ச்சங்கம் தலைவர் விழா வேந்தர் இரா.பாஸ்கரன் வரவேற்புரை வாசிக்க நூலாசிரியர் இலக்கியத் திறனாய்வாளர் திரு.கொடைக்கானல் காந்தி அவர்கள் ஏற்புரை வழங்கினார்.