கோயம்பேடு பேருந்து முனையத்தில் லுலு மால்… பரவும் வதந்தி – தமிழக அரசு விளக்கம்

0
164

கோயம்பேடு பேருந்து முனையம் இருந்த இடத்தில் லுலு மால் அமைக்க நிலம் தரப் போவதாக சமூக வலைதளங்களில் வதந்தி என்று தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.

கோயம்பேடு பேருந்து முனையத்தை காலி செய்து, அந்த இடத்தை லுலு மால் அமைக்க அரசு தரப்போவதாக பரவும் செய்தி வதந்தி என தமிழ்நாடு அரசின் உண்மை சரி பார்ப்புக்குழு தெரிவித்துள்ளது. அடிப்படை ஆதாரமற்ற பொய் தகவலை உண்மை என நம்பி, கட்சியினர் சிலரும் தனி நபர்களும் வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். கோயம்பேட்டில் லுலு மால் என்பது முற்றிலும் தவறானது என தமிழ்நாடு அரசின் உண்மை சரி பார்ப்புக்குழு தெரிவித்துள்ளது.