பா.ஜ.க.வுக்கு வாய்ப்பே இல்லை… தமிழகத்தில் திமுக கூட்டணியே 40 இடங்களிலும் வெற்றி பெறும்: பிரசாந்த் கிஷோர் கணிப்பு

0
136

பாரதிய ஜனதா கட்சி 2024 லோக்சபா தேர்தலில் 370 இடங்களை வெல்வதை லட்சிய இலக்காக நிர்ணயித்துள்ளது. 2019 ஐ விட 67 இடங்கள் அதிகம் வெல்வோம் என்று பாஜக தலைவர்கள் மேடைக்கு மேடை அறிவித்து வருகின்றனர். ஆனால் பாஜகவால் இந்த இலக்கை அடைய முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பாஜக இலக்காக நிர்ணயம் செய்துள்ள 370 இடங்களில் வெல்ல வாய்ப்பே இல்லை என்றும் தமிழகத்தில் திமுக கூட்டணியே 40 இடங்களிலும் வெற்றி பெறும் என்றும் அரசியல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தேர்தல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோர் வெளியிட்டுள்ள கணிப்பில், மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் பாஜக 443 மக்களவைத் தொகுதிகளிலும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு 100 இடங்களிலும் போட்டியிடுகிறது. இதில் 370 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி தனித்து வெற்றி பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லவே இல்லை. அதற்கான சான்ஸ் பூஜ்ஜியம். ஆனாலும் அவர்கள் இந்த நம்பரை திரும்ப திரும்ப சொல்ல காரணம் இருக்கிறது. அது ஒரு இது உளவியல் விஷயம். இது எதிர்க்கட்சிகளுக்கு உளவியல் ரீதியான அடியாகும். பாஜகவால் அந்த இலக்கை எடுக்க முடியாது. ஆனாலும் உளவியல் ரீதியாக எதிர்கட்சிகளை அடிக்க இப்படி செய்கின்றனர், கடந்த முறை வாங்கியதை விட கூடுதலாக 10-20 சீட் வாங்கினால் ஆச்சர்யம். ஆனால் மொத்தமாக 60-70 சீட் கூடுதலாக வாங்குவதற்கு சான்ஸே இல்லை. தேசிய அளவில் பாஜக தனியாக 370 எல்லாம் எடுக்க சான்ஸ் குறைவு. பிரதமர் நரேந்திர மோடி பாராளுமன்றத்தில் இந்த எண்ணிக்கையைப் பற்றி பேசினார். ஆனால் இது பாஜக தொண்டர்களுக்கான இலக்கு என்று நான் நினைக்கிறேன், நிஜத்தில் சாத்தியம் அல்ல. 370வது சட்டப்பிரிவின் பின்னணியில் முதன்முறையாக நாடாளுமன்றத்தில் 370 என்ற எண்ணிக்கையை நரேந்திர மோடி குறிப்பிட்டார், 370வது சட்ட பிரிவை பாஜக நீக்கியது. இதனால் பாஜக தனியாக 370 இடங்களைப் பெறும் என்று மோடி நம்புகிறார். சில இடங்களில் என்டிஏ 400 ஐத் தாண்டும் என்றும் மோடி கூறினார். அவர் உரையாற்றிய பல பேரணிகளில் 370 இடங்கள் இலக்கு என்று போஸ்டர்கள் வைக்கப்படுகின்றன, என்று பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.

பாஜக தனியாக 370 இடங்களை வெல்வதன் மூலம் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 400 ரன்களை கடக்க வாய்ப்பாக அமையும் என்பதாலும் தனித்து ஆட்சி அமைக்க முடியும் என்று பாஜக நம்புகிறது.

மக்களவையில் 543 இடங்கள் உள்ளன, பாஜக 2014 தேர்தல்களில் 282 மற்றும் 2019 இல் 303 இடங்களை வென்றது. ஆனால் தற்போது மோடி அலை இல்லை. கண்டிப்பாக கடந்த காலங்களில் பெற்ற இடங்களில் தோல்விகள் காணும் வாய்ப்பே அதிகம். அதனால் 370 என்ற இலக்கை அடைய வாய்ப்பே இல்லை.

ஆனால் பா.ஜ.க. ஆட்சி அமைக்க முடியும் என்று பலரும் கணிக்கின்றனர். தற்போதைய முடிவுகள் மற்றும் பல இடங்களில் பா.ஜ.க. போட்டியிடுவதிலிருந்து பின்வாங்கும் போக்கு சிபுசோரன், கவிதா மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் கைது, பா.ஜ.க.வின் மீதான ஊழல், தேர்தல் நிதி மற்றும் இவிஎம் இயந்திர மு¬¬கோடுகள் போன்ற பல்வேறு முறைகேடுகள் இந்திய அளவில் பேசுப் பொருளாக மாறியுள்ளதால் பா.ஜ.க ஆட்சி அமைப்பது சிரமம்.

அதோடு தொடர்ந்து இரண்டு முறை ஆட்சியில் இருப்பதால் ஆட்சி மாற்றத்தை மக்கள் இயல்பாக விரும்புவார்கள் என்பதும் பொதுவான கருத்தாக உள்ளது.
இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன் அவர் தமிழகத்தில் திமுக கூட்டணியே 40 இடங்களிலும் வெற்றி பெறும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.