செவாலியர் டி தாமஸ் எலிசபெத் கல்லூரி, பூமி அறக்கட்டளை மற்றும் எவர் கிரீன் பப்ளிகேஷன்ஸ் இணைந்து நடத்திய பூமி ஞானசூரியன் அவர்களின் “ஆறும் ஊரும்” புத்தக வெளியீட்டு விழா 26.09.24, வியாழன் அன்று சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம், நூல் வெளியீட்டு அரங்கத்தில்நடைபெற்றது.
இவ்விழாவில் சென்னை பெரம்பூர், செவாலியர் டி தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரியை சார்ந்த ஏராளமான மாணவிகள் பங்கேற்றனர்.
சென்னை பெரம்பூர், செவாலியர் டி தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரியின் தாளாளர், திருமிகு.எல்.பழமலை (ஓய்வறியா) ஐ ஏ எஸ் அவர்கள் வரவேற்பு மற்றும் வாழ்த்துரை வழங்கினார்கள்.
முதல்வர், தாகூர் கலைக் கல்லூரி, மற்றும் மேனாள் பதிவாளர் பாண்டிச்சேரி பல்கலைக்கழகம், பேராசிரியர். முனைவர். சசிகாந்த தாஸ் தலைமை உரையாற்றினார்கள்.
இவ்விழாவில் முதல்வர், தாகூர் கலைக் கல்லூரி புதுச்சேரி பேராசிரியர். முனைவர். சசிகாந்த தாஸ் அவர்கள் வெளியிட திருமிகு.எல்.பழமலை (ஓய்வறியா ஆட்சியாளர்)ஐ ஏ எஸ் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
சென்னை செவாலியர் டி தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரி, உதவிப் பேராசிரியர், முனைவர்.ஏ.கஸ்தூரி நூல் குறித்த மதிப்புரையை வழங்கினார்கள்.
சென்னை செவாலியர் டி தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரி, முதல்வர், பேராசிரியர், முனைவர்: ஸ்ரீதேவி, மற்றும் சென்னை செவாலியர் டி தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரி, நூலகர், முனைவர்.சுமதி பத்மனாபன், வாணியம்பாடி. மேனாள் தலைவர், தமிழ் சிந்தனையாளர் மன்றம், சென்னை.வேளச்சேரி, மேனாள் தலைமை மேலாளர், பாரத ஸ்டேட் வங்கி, திருமிகு.எம்.பாஸ்கரன், மேனாள் சுகாதார ஆய்வாளர், தென்னக ரயில்வே, மற்றும் எழுத்தாளர், திருமிகு.ஏ.அறிவழகன், பூமி அறக்கட்டளை, திட்ட மேலாளர், திருமிகு.எம்.வெங்கடேசன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
பூமி ஞானசூரியன் அவர்கள் மாணவர்களின் பல்வேறு கேள்விக்கு பதில்களை அளித்து ஏற்புரையாற்றினார்.
நூலின் சிறப்பு:
104 தமிழக ஆறுகளை பதிவு செய்யும் முதல் தமிழ் நூல்.
இறந்த ஆறுகள் பற்றியும் அதனை சரி செய்யும் முறைகள் பற்றியும் 40 முதல் 50 ஆண்டுகள் கூட ஓடாத ஆறுகளை ஆண்டு முழுவதும் ஓடவைக்கும் முறையை சொல்லித்தரும் நூல்.
ஆறுகளை பாதுகாப்பதும் பராமரிப்பதும் அரசின் கடமை மட்டுமல்ல, குடிமக்களின் கடமையும் கூட.