புதுச்சேரி வரதராஜ பெருமாள் கோவில்; மார்கழி மாத முதல் நாள் வழிபாடு!

0
169

மார்கழி மாதம் தேவர்களுக்கான மாதமாக உள்ள நிலையில் இன்று மார்கழி முதல் நாள் என்பதால் புதுச்சேரியில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு மிக்க திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, ஆழ்வார் பாசுரங்கள் போன்றவற்றை பக்தர்கள் பாடி வழிபாடு செய்தனர்.

கீதையில் கிருஷ்ணன் கூறியதாவது தமிழ் மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்றார். இந்த மாதம் தேவர்களுக்கான அதிகாலை பொழுதாக கருதப்படுகிறது. மனிதர்களை பொறுத்தவரை ஒரு வருடம் என்பது கடவுளுக்கு ஒரு நாள் என்பர். தேவர்கள் விழித்திருக்கும் காலமாக மார்கழிமாதம் உள்ளது.

சிறப்பு வாய்ந்த மார்கழி மாதம்

அதனால் தான் மார்கழி என்பது தெய்வங்களுக்கு வைகறை பொழுதைப் போன்றது. மிகவும் சிறப்புடைய மாதம் மார்கழி. எனவே இந்த மாதம் முழுவதும் இறை வழிபாட்டிற்கு உகந்தததாக அமையும். அதன்படி மார்கழி முதல் நாளான இன்று புதுச்சேரியில் உள்ள பிரசித்திபெற்ற வரதராஜ பெருமாள் கோயில், வன்னியப்பெருமாள் கோயில் உள்ளிட்ட பல்வேறு பெருமாள் கோயில்களிலும், சிவாலயங்களிலும் இன்று அதிகாலை முதல் பக்தர்கள் வருகை புரிந்தனர்.