‘நாட்டை வழிநடத்தும் நாற்பதுக்கு நாற்பது’ – –  தமிழச்சி தங்கபாண்டியன் MP

0
158

திமுக கூட்டணி 40 இடங்களில் வென்றும் பயனில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்…

அப்படியில்லை…

1. தங்களை எதுவும் செய்துவிட முடியாது என்ற இறுமாப்பில் இருந்த பாஜக இப்பொழுது பிற மாநிலக் கட்சிகளை அரவணைத்துச் செல்ல வேண்டிய சூழலுக்கு வந்திருக்கிறது.

2. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மோடி தலைக்கு மேல் தூக்கி வணங்கியிருக்கிறார்.

3. ஜனநாயகம் என்பது அதிகாரம் செலுத்துவதில்லை- அடங்கி அரவணைத்துச் செல்வது என்பதை பத்தாண்டுகளுக்குப் பிறகு பாஜக உணரத் தொடங்கியிருக்கும்; தாங்கள் எதைச் செய்தாலும் கேட்பதற்கு ஆள் இல்லை என்ற நிலையிலிருந்து இறங்கி வந்திருக்கும்.

4. இனி பாஜக அசைக்கவே முடியாத சக்தி என்று ஊடகங்களால் கட்டமைக்கப்பட்டு மக்களை நம்ப வைக்க நடந்த முயற்சிகள் உடைத்து நொறுக்கப்பட்டிருக்கிறது.

5. ஜனநாயகத்தில் மக்களே அதிகாரம்மிக்கவர்கள்; தனிமனிதர்களோ அல்லது ஒரு இயக்கமோ மக்களைவிட அதிகாரம் கொண்டது இல்லை என்பதை இந்தத் தலைமுறைக்கு 2024 தேர்தல் உணர்த்தியிருக்கிறது.

ஒருவேளை தமிழ்நாடு வேறு மாதிரி முடிவெடுத்திருந்தால் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைத்திருக்கக் கூடும். மேலே சொன்னது எதுவுமே நடக்காமல் போயிருக்கலாம்…

தமிழ்நாடு ஜனநாயகத்தை காப்பாற்றியிருக்கிறது; மக்களே முக்கியம் என்பதைக் காட்டியிருக்கிறது…

அதனால்தான் இதன் பெயர் ‘நாட்டை வழிநடத்தும் நாற்பதுக்கு நாற்பது’

…………….

நாற்பதும் வென்று என்ன பயன்?

திமுக கூட்டணி 40/40 வென்று என்ன பயன் என்று நக்கலா கேட்பது யாருன்னு நமக்கு நல்லாவே தெரியும்.

இந்தியாவில் தாமரை மலராத மாநிலமாக தமிழ்நாடு தனித்துவமாய் நிற்பதை பார்க்கும் போது பலருக்கு கடுப்பும் காண்டும் வருவது இயல்பு தானே..அந்த இயலாமையும் கோவமும் இப்படித் தானே பேச வைக்கும்..

கடந்த பத்து வருசமா அதிகாரத்துல இருக்குற பாஜக அனைத்து தன்னாட்சி அமைப்புகளான நீதிமன்றங்கள் சிபிஐ தேர்தல் ஆணையம் அமலாக்கத்துறை எல்லாத்தையும் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு இவ்ளோ அட்டூழியம் செய்தும் இன்று அவர்களால் வெல்ல முடிந்ததா?

இன்றைக்கு நிதிஷும் நாயுடுவும் எட்டி உதைச்சா நீங்க வாங்கி வெச்சிருக்குற 240 க்கும் என்ன மரியாதைன்னு பார்த்தா எந்த மரியாதையும் கிடையாது. கொஞ்சம் அடங்குங்கடா.

கடந்த முறை நாம் 39/40 எடுத்தோம். அதுவும் தேனியில் ஓபிஎஸ் மகன் பிராடு பண்ணி தான் வெற்றி பெற முடிந்தது. நியாயமா பார்த்தா 2019, 2024 இரண்டிலும் திமுக கூட்டணி 40/40 தான் சரியான கணக்கு.

அப்படியானால் மக்கள் திமுக கூட்டணி தான் சரி என்று நூற்றுக்கு நூறு இன்று வரை நம்புகிறார்கள்..

40/40 வாங்கி என்ன பிரயோசனம்?

நீட் ஒழிந்ததா? ஜிஎஸ்டியில் மாற்றம் வந்ததா? கல்வி மாநில பட்டியலுக்கு வந்ததா ? திமுக கொடுத்த வாக்குறுதி நிறைவேறியதா என்றால் ஆம் நிறைவேறவில்லை தான்.

சங்கிகளின் இத்தனை கள்ள ஆட்டத்தையும் அழுகுணி மங்குனி ஆட்டங்களையும் மத வெறுப்பு பிரச்சாரங்களையும் கடந்து இவ்வளவு தூரம் வெற்றிக்கு அருகாமையில் வர முடிந்த நம்மால்

அந்த வெற்றிக் கோட்டையும் நாம் தொட்டிருந்தால் எவ்ளோ நன்றாக இருந்திருக்கும் என்ற ஆதங்கம் நம் எல்லோருக்குமே இருக்கிறது. மறுக்க இயலாது..

காரணம் கடந்த பத்து ஆண்டுகளாகவே ஒன்றிய அரசால் கடுமையாக வஞ்சிக்கப்பட்டு இருக்கிறோம்.

நமக்கான வளர்ச்சிகள் தடைபட்டு கிடக்கின்றன. மாற்றாந்தாய் மனநிலையோடு் ஒன்றிய அரசு நம்மை நடத்தி நம் வளர்ச்சியை தடுக்க கங்கணம் கட்டி வேலை செய்கிறார்கள்.

எந்த அளவுக்கு வெறி கொண்டு மிக மிக கேவலமாய் நடந்து கொள்கிறார்கள் என்று பார்த்தால் தூத்துக்குடி நெல்லை குமரி மாவட்ட மழை வெள்ள பேரிடருக்கு கூட எந்த நிதியும் தர மாட்டோம் என்று கைவிரிக்கும் அளவுக்கான கேவலம்.

நம் வரிப்பணத்தில் நமக்கு திரும்ப வருவது 29 பைசா. உத்திரபிரதேசத்துக்கு அவர்கள் செலுத்தும் வரியை விட நான்கு மடங்காய் திருப்பி செலுத்துகிறார்கள்.

இப்படி எல்லா வகையிலும் கடந்த பத்து ஆண்டுகளாய் வஞ்சித்து நமது வளர்ச்சியை தடுக்கிறார்கள்.

நமக்கான நிதிகளை தருவதில்லை. வளர்ச்சி திட்டங்களை தருவதில்லை.. அந்த வகையில் மிகப்பெரிய வருத்தம் இருக்கவே செய்கிறது.

ஆனால் அதற்காக அநியாயத்தின் பக்கம் நாம் ஒரு போதும் நிற்க இயலாது. மதவெறியர்களுக்கு ஒரு போதும் இணங்கி போக முடியாது..கூடாது.

இப்படிப் பட்ட கேவலமான சங்கி ஜந்துக்களின் எதிரணியில் நிற்பது தான் தமிழர்கள் நமக்கான அறம்.

அராஜகத்தின் பக்கமாய் நின்று பெறும் வெற்றிகளை விட அறத்தின் பக்கம் நின்று பெறும் தோல்விகள் கண்ணியமானவை.

இந்தியா என்பது தமிழ்நாடு மட்டுமல்ல. 28 மாநிலங்கள் 8 யூனியன் பிரதேசங்கள் 140 கோடி மக்கள் கொண்ட தேசத்தில் தாமரையை மலர விடாத ஒரே மாநிலமாக தமிழ்நாடு் இருப்பதை விட பெருமை நமக்கென்ன வேண்டும்?

நாம் சரியாக இருக்கிறோம். அதே வேளையில் இந்த 28 மாநிலங்களில் அராஜகத்தின் பக்கம் நின்று சங்கிகளுக்கு காவடி தூக்கும் அறியாமை நிறைந்த

படித்தும் மூளை வேலை செய்யாத சாதிவெறியும் மதவெறியும் பிடித்த மடையர்கள் ஏராளம் இருக்கவே செய்கிறார்கள். இவர்களோடு எல்லாம் சேர்ந்து தான் வெற்றியை பெற்றாக வேண்டி இருக்கிறது.

நேற்று முன்தினம் வரை உத்திர பிரதேச மாய்க்கான்கள் என்று கேலி செய்தோம். ஆனால் இன்றைக்கு அவர்கள் தவறை உணர்ந்து திருந்தி சங்கிகளுக்கு சிறப்பான அடி கொடுத்திருக்கிறார்கள்.

எங்கள் வெற்றி எண்ணிக்கையின் தொடக்கமே 80 + இல் தான் ஆரம்பிக்கும் என்று என்ன எகத்தாளம்.

அதாவது உத்திரபிரதேச 80 சீட்டும் தங்களுக்கு தான் என்றே பேசினார்கள். ஆனால் அடிச்ச ஆப்பு எப்படி இருந்துச்சி?

உபிக்காரன் ஒரு பக்கம் திருந்துனா அதற்கு ஈடாக கன்னடர்கள் கூடுதலா கோமியம் குடிக்க கிளம்பிட்டார்கள். இது ஒரு குழு விளையாட்டு..

சில ப்ளேயர் சிறப்பா விளையாடி சதம்லாம் அடிக்கும் போது ஒரு சில பயலுக சரியா விளையாடமல் சொதப்பி மொத்தமா அணிக்கு பாதகமா முடிவதை போல தான் இந்திய மாநிலங்கள் நிலவரமும்.

நாம நல்லா விளையாண்டு் இருக்கோம். நம்ம பக்கத்துலயே இருந்துகிட்டு கோமியம் டேஸ்ட்டா இருக்குன்னு குடிக்கிற மாநிலத்தை என்ன செய்ய?

இதற்காகவெல்லாம் தளர்ந்து போக கூடாது. அரசியல் இப்படித்தானே இருக்கும்.

இந்தியா கூட்டணி முழுமையாக வென்று இருந்திருந்தால் நமக்கு சிறப்பான அமைச்சர்கள் நம் மாநிலத்துக்கான வளர்ச்சி நிதி மற்றும் வளர்ச்சி திட்டங்கள் என எல்லாம் கிடைத்திருக்கும்..

மத்தியிலும் சரி மாநிலத்திலும் சரி கருத்து ஒற்றுமை உள்ள சரியானவர்களுடன் கூட்டணியாகவும் ஆளும் கட்சியாக இரண்டிலும் இருந்தால் நம்ம மாநில வளர்ச்சியே வேற தான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

அதற்காக இந்த தோல்வி பார்த்து தளர்ந்து விட கூடாது. சங்கிகளின் வீழ்ச்சி தொடங்கி விட்டது.

நேற்று முன்தினம் வரை இருந்த பழைய ஆணவம் அகங்காரம் திமிர்த்தனம் தான்தோன்றித்தனம் எல்லாம் இனி வாய்ப்பில்ல ராஜா.

ஒரு நாளைக்கு ஏழு உடை மாற்றி வெறும் பேஷன் ஷோ நடத்திட்டு இனி போக முடியாது.

நாடாளுமன்றத்துக்கு வராமலும் விவாதங்களில் பங்கெடுக்காமலும் பதில் சொல்லாமலும் ஓடவும் ஔியவும் முடியாது.

வாய் திறந்து பேசியாக வேண்டும். கடும் விவாதங்களில் பதில் சொல்லியாக வேண்டும்.

அம்மாவாசை வழக்கமா சொல்ற கட்டுக்கதைகளை எல்லாம் வாய்க்கு வந்த படி அடிச்சி விடுறதும் ஜண்டா தன் இஷ்டத்துக்கு மாநில கட்சிகளை மிரட்டி உருட்டி மத வெறுப்பு வன்முறைகளை எல்லாம் இஷ்டத்துக்கும் செய்ய முடியாது.

அப்படி செய்ய நினைச்சா நாயுடுகாரு சங்குல ஏறி மிதிக்காமல் விட மாட்டாரு. ஆந்திர மாநில நலனுக்காக எல்லாவற்றையும் காவு கொடுக்குற ஆளா அவரு இருக்க மாட்டார்.

சங்கிகளின் மூக்கணாங்கயிறு நாயுடுகாருவிடம் இருக்கிறது.

கடந்த இரண்டு நாளாவே சங்கிகளின் ஸ்ருதி பார்த்தாலே தெரியும்..எவன் மூஞ்சிலயும் ஈயாடவில்லை. திருடனுக்கு தேள் கொட்டுன மாதிரி பொத்திட்டு இருக்குறதை பார்த்தாலே தெரியலியா வாங்குன மொத்து செம மொத்துன்னு.

பாஜகவை எவனாலும் அசைக்கவே முடியாதுன்னு ஆணவமா திரிஞ்சவனுங்களுக்கு ராமர் கோவிலை கட்டுனதா பெருமை பீத்துன ஊருல இருந்தே எட்டி உதைச்சிருக்கானுங்க.

மாறவே மாறாது என்று சொன்ன உத்திர பிரதேச களம் மாறுகிறது..அதைப் போலவே எல்லா இடங்களிலும் இன்னும் மாறும்.. கவலை வேண்டாம்.

உலக வரலாற்றில் மக்கள் விரோத சர்வாதிகார கும்பலின் முடிவு என்பது ஒரு நாள் அகல பாதாள வீழ்ச்சி தான்.

கடைசியா ராஜபக்சேவை கொண்டாடிய மக்கள் அவனுக்கு எதிராக அந்த குடும்பத்துக்கு எதிரா நடத்திய வன்முறைகள் வரை பார்த்துட்டோம்.

விடியலுக்கான காலம் வந்தே தீரும். ஒரு வேளை இன்று தாமதாமாகி இருக்கலாம். ஆனால் நாளை அது விடிந்தே தீரும்.

நியாயத்தின் பக்கம் அறத்தின் பக்கம் மக்களின் பக்கம் தமிழ்நாடு எந்த சலனமும் இன்றி கம்பீரமா நிற்பதுவே நமக்கான மகிழ்ச்சி.

பாஜகவை அசைக்கவே முடியாதுன்னு நம்பிக்கை இழந்து நம்மவர்கள் பலரே நேற்று முன்தினம் வரை பேசினார்கள். இந்தா அசைச்சி பார்த்துட்டோம். அடுத்து முழுமையாக வீழ்த்தாமல் ஓயமாட்டோம். நம்புங்கள் எதுவும் தாமதமாகி விடவில்லை.

………..