செல்வி பசுமரத்தி சுதிக்ஷா அவர்களின் நாட்டிய அரங்கேற்ற நிகழ்வில் வெகு சிறப்பாக பரத நாட்டிய நடனமாடியதற்கு அபிநயா சிரோன்மணி மற்றும் நாட்டிய தாரகை பட்டம் வழங்கப்பட்டதோடு கலந்துக்கொண்ட பெருந்திரளானோர் நடனத்தை கண்டு பாராட்டினை தெரிவித்தனர்.
செல்வி பசுமரத்தி சுதிக்ஷா அவர்கள் சென்னை அபிநயா நாட்டியாலயாவில் நாட்டியப் பயிற்சியை நிறைவு செய்து 01.09.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை சேத்துபட்டு சின்மயா ஹெரிடேஜ் சென்டர் தபோவன் ஹாலில் நடைபெற்ற நடன அரங்கேற்ற நிகழ்வில் பெருந்திரளானோர் பங்கேற்றனர்.
தமிழக கலை பண்பாட்டுத் துறை துணை இயக்குனர் பி.ஹேமநாதன் மற்றும் பரதநாட்டிய கலாக்ஷேத்ரா அறக்கட்டளையில் பேராசிரியர் கே.மோகன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர்.
இந்நிலையில் அபிநயா நாட்டியாலயா சார்பில் அபிநயா சிரோன்மணி பட்டமும் பேனா முனை பத்திரிகையாளர்கள் – சமூக ஊடக சங்கம் மற்றும் ஸ்ரீவாசவி ஜோதி – மாத இதழ் சார்பில் நாட்டிய தாரகை பட்டமும் வழங்கப்பட்டது.
திருமதி பானுமதி தேவராஜன் அவர்களின் பேத்தியும், திருமதி லீலாவதி – திரு. காமேஷ் பாபு அவர்களின் புதல்வி ப. சுதிக்ஷா தனது 5 வயதில் குரு டாக்டர் சுமதி சுந்தரின் வழிகாட்டுதலின் கீழ் தனது பரத நாட்டியப் பயணத்தை 2013ல் தொடங்கினார். அதே ஆண்டில் அவரது சலங்கை பூஜையுடன் அவரது அர்ப்பணிப்பு முதன் முதலில் அரங்கேறியது. அன்றிலிருந்து திருவதிகை, திருவையாறு, தஞ்சாவூர் சின்னமேளம், வேலூர் பொற்கோயில் திருப்பதியில் நடன நீராஞ்சனம், பிரகதீஸ்வரர் கோயில் மற்றும் குருவாயூர் உள்ளிட்ட புகழ்பெற்ற திருத்தலங்களில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். இவரது திறமையால் பல்வேறு மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று விருதுகளையும் பெற்றுள்ளார்.
சுதிக்ஷா பரதநாட்டியத்தில் தரம் 7 வரை முடித்துள்ளார். மேலும் 8ம் தரத்திற்கு தயாராகி வருகிறார். அவரது நடன பயிற்சியுடன் வீணை மற்றும் குரல் இசையில் படிப்பை தொடர்ந்து, மேலும் அவரது கலைத் திறன்களை மேம்படுத்தினார். தற்போது அவர் முகப்பேர் நாராயணா ஒலிம்பியாட் பள்ளியில் பதினோராம் வகுப்பில் பயின்று வருகிறார். தனது மாறுபட்ட திறமைகள் மற்றும் அர்ப்பணிப்பு மூலம் சுதிக்ஷா இந்திய பாரம்பரிய கலைகளின் வளமான பாரம்பரியங்களை தொடர்ந்து மதிப்பதோடு அதனை பயிற்சியும் பெற்று வருகிறார்.
செல்வி பசுமரத்தி சுதிக்ஷா தொடர்ந்து பல சாதனைகள் படைக்க மனதார பாராட்டுகிறோம்.