தமிழக பாஜகவில் அண்ணாமலைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தும் சீனியர்கள்!

0
207

அண்ணாமலை இரட்டை இலக்கை வெற்றியை பெற்றுத்தருவேன் என்றும் சொல்லியும் 25% மேல் வாக்கு வங்கியை பெற்றுக் காட்டுவேன் என்று சொல்லி எந்த தலையீடு இருக்கக்கூடாது என்று பா.ஜ.க.தலைமையிடம் கோரிக்கை பல திட்டங்களை வகுத்து செயல்ட்டிருந்தார். ஆனால் அண்ணாலையால் தான் சொல்லியிருந்த எந்த இலக்கையும் அவரால் அடைய முடியாத சூழலில் அவரே முன்வந்து ராஜினாமா கடிதத்தை வழங்கியிருப்பதாக கூறப்படுகிறது. தலைமை அதனை ஏற்காது என்றாலும் இந்த விவரத்தை கேள்விப்பட்ட கட்சியின் அண்ணாமலைக்கு எதிராக செயல்படும் பலரும் அண்ணாமலை பற்றிய புகாரை அறிககையாக தொகுத்து வங்கியுள்ள நிலையில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வெளிப்படையாகவே அண்ணாமலையை விமர்சித்துள்ளனர்.

சமீபத்தில் பாஜக அறிவுசார் அணி நிர்வாகி கல்யாண் ராமன் பகிரங்க குற்றச்சாட்டுடை முன்வைத்திருந்தார்.

கட்சியின் பணத்தை கொண்டு அண்ணாமலையின் வார்ரூம் அவரை விளம்பரப்படுத்தவும், சொந்தக் கட்சித் தலைவர்களை வசைபாடவும் தான் செயல்படுகிறது. – கிருஷ்ணகுமார், அமர்பிரசாத் ரெட்டி போன்ற பலர் பாஜக கட்சிப் பணத்திலிருந்து லட்சக்கணக்கில் சம்பளத்தை பெறுவது மட்டுமல்லாமல் அமலாக்கத்துறை வழக்கில் சிக்கியவர்கள், தங்கம் கடத்துபவர்கள், கோடிக்கணக்கில் மோசடி செய்பவர்களிடமிருந்து பணம் பறிப்பது போன்று மாஃபியாவாக செயல்படுகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதேபோல் தமிழ்நாட்டில் பாஜகவிற்கு வந்த ஓட்டுகள் கூட்டணி கட்சிகளுக்கானது. மொத்தத்தையும் அண்ணாமலை கெடுத்துட்டாரு என்று – எஸ்.வி.சேகர் விமர்சனத்தை முன்வைத்திருந்தார்.

பா.ஜ.கட்சியின் முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், செய்தியாளர்களிடம் பேசும்போது ‘‘அதிமுக- பாஜ கூட்டணி அமைத்து இருந்தால் 35 இடங்கள் கிடைத்திருக்கும் என்ற எஸ்.பி.வேலுமணியின் கருத்து உண்மையே. அதிமுக குறித்த அண்ணாமலையின் கருத்துக்கு அவரிடமே விளக்கம் பெறுங்கள். அண்ணாமலைக்கு கூட்டணி அமைக்க விருப்பம் இல்லை. அதிமுக உட்கட்சி விவகாரத்தில் நான் எந்த கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை. அண்ணாமலை சொன்னால், அது அவரது கருத்து. கூட்டணி என்பது அரசியல் வியூகம். 2026 தேர்தல் குறித்து முடிவு செய்ய நிறைய கால அவகாசம் உள்ளது. கூட்டணி குறித்து தேசிய தலைமைதான் முடிவு செய்யும். பாஜ ஐடி விங், அண்ணாமலை வார் ரூம் நிர்வாகிகளை எச்சரிக்கிறேன்.

கட்சியின் பிற தலைவர்கள் மீது தவறாக எழுதினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் மாநில தலைவராக எச்சரிக்கிறேன்’’ என்று அதிரடியாகப் பேசினார். பரட்டை என்று அவரை விமர்சனம் செய்வதை சுட்டிக்காட்டி, ‘நான் அழகின்னு என்னைக்கும் சொன்னதில்லை. நான் பரட்டை தான். ஆனா, இது என்னோட நிஜம்’ என்று அவர் தி.மு.க.வை குற்றம் சாட்டுவதுபோன்று பலருக்கு தோன்றினாலும் முழுக்க முழுக்க அண்ணாமலைக்குக் கொடுத்த எச்சரிக்கை என்கிறார்கள்.
விரைவில் அண்ணாமலையை தண்டிக்காமல் எல்.முருகன் மாதிரி பொறுப்பு கொடுத்து தமிழகத்திலிருந்து அண்ணணமலையை அகற்ற மேலிடம் திட்டமிட்டிருக்கிறது.
அநேகமாக அடுத்த வானதிதான் என்கிறார்கள்.