மறைந்த மகப்பேறு மருத்துவர் ஞானசௌந்தர் படத்திறப்பு நிகழ்ச்சி சென்னை ராயபுரம் செயிண்ட் மேரிஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. ஆசிரியர் முனைவர் தண்டபாணி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மகப்பேறு மருத்துவர் தனலட்சுமி பங்கேற்று பேசினார். அவர் பேசுகையில் மருத்துவர் ஞானசௌந்தரி சிறந்த மருத்துவராக மட்டுமில்லாமல் பத்திரிகையாளராகவும் இருந்து நாகமணி என்ற பத்திரிகை நடத்தினார். தன்னுடைய மருத்துவமனையில் பணியாற்றிய சக ஊழியர்களுக்கு தொகுப்பு வீடுகளையும் கட்டிக் கொடுத்தார் ஊழியர்களை சக நண்பர்களாக பாவித்தார் ஆயிரக்கணக்கான தம்பதியர் குழந்தை பேறுகிடைக்க வழிவகை செய்தார். மாவட்டந்தோறும் அமைக்கப்படும் தமிழக அரசின் மருத்துவ கல்லூரி ஒன்றிற்கு மகப்பேறு மருத்துவர் ஞானசெளந்தரி பெயர் சூட்ட வேண்டும் என்று டாக்டர் தனலட்சுமி கோரிக்கை விடுத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் நாடார் கூட்டமைப்பு தலைவர் ராகம் செளந்தரபாண்டியன், டாக்டர் ஞானசெளந்தரியின் உதவியாளராக பணியாற்றிய பட்டாபிராமன், டாக்டர்கிரிஜா அசோக்குமார், செயிண்ட் மேரீஸ் மெட்ரிக் பள்ளி தாளாளர் மார்ட்டின் கென்னடி, வடசென்னை வியாபாரிகள் சங்கத்தலைவர் ஜி. ராபர்ட், பென்னி பிஸ்கட் அதிபர் காமராஜ் , முன்னாள் கவுன்சிலர் மு. சம்பத், தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் பொதுசெயலாளர் ராமலிங்க ஜோதி வணிகர். மகாஜன சங்கத்தின் வடசென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் அதிசய எட்வர்ட் ராஜா வண்ணாரப்பேட்டை எம்சி ரோடு ஜிஏ ரோடு வியாபாரிகள் சங்கத் தலைவர் தமிமுன் அன்சாரி முனைவர் சுந்தர், அண்ணா பூங்கா நடப்போர் நல சங்க செயலாளர் குணசேகரன் நண்பர்கள் நகர நல அமைப்பு செயலாளர் முனைவர் சுந்தர், நடிகர் எம் டி ஜெயராஜ் ராயபுரம் ரவுண்டப் மக்கள் இயக்கத்தின் செயலாளர் மு ராமச்சந்திரன் பொருளாளர் தையல் கலைஞர் இராமலிங்கம் இணை செயலாளர்கள் எஸ் எஸ் ஜெயமோகன் , எம் டி ஜெயராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மறைந்த டாக்டர் ஞான சௌந்தரியின் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஐந்து நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. முடிவில் ராயபுரம் ரவுண்டப் இணை செயலாளர் அதிசய எட்வர்ட் ராஜா நன்றி கூறினார்
Latest article
உணவுப் பொருட்களை பதப்படுத்த உதவும் சுற்றுசூழலுக்கு உகந்த உயிர்நெகிழி உருவாக்குதல் குறித்த பயிற்சி
18.06.2025 புதன்கிழமை அன்று மீன்வள பொறியியல் கல்லூரியின் சார்பாக நாகப்பட்டினம் முட்டம் கிராமத்தில் உணவுப் பொருட்களை பதப்படுத்த உதவும் சுற்றுசூழலுக்கு உகந்த உயிர்நெகிழி உருவாக்குதல் பயிற்சியானது நடத்தப்பட்டது. இந்த பயிற்சியானது மத்திய அரசின் மேம்பட்ட இந்தியா பிரச்சாரம் திட்டத்தின் கீழ்...
வடசென்னையின் கொடுங்கையூரில் குப்பை எரிவுலைத் திட்டத்தை கைவிடுக – துரை வைகோ எம்பி அறிக்கை
மறுமலர்ச்சி திமுக முதன்மைச் செயலாளர் மற்றும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ 14.05.2025 அன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில்...
தூத்துக்குடி ஸ்டெர்லைட் நச்சு ஆலைக்கு எதிரான போராட்டம், கூடங்குளம் அணுவுலைக்கு எதிர்ப்பு, நியூட்ரினோ...
சீமானின் போலியான தமிழ்த்தேசிய அரசியலை வீழ்த்த வேண்டும் – திருமுருகன் காந்தி
மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்கள் செய்தியாளர் சந்திப்பு நடத்தினார். அவர் பேசியதாவது...
ஈரோடு இடைத்தேர்தலில் நம் கடமை:
ஈரோடு இடைத்தேர்தல் முக்கியமான விடயங்களை நமக்கு சொல்லும் தேர்தலாகிவிட்டது. 2026ம் ஆண்டு சட்டமன்ற...